சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி தேர் திருவிழா

 

காளையார்கோவில், ஜூன் 2: காளையார்கோவிலில் உள்ள சௌந்தரநாயகி அம்பாள், சமேத சோமேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நேற்று வைகாசி தேர் திருவிழா நடந்தது.
காளையார்கோவிலில் சிவகங்கை சமஸ்தானம், மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்திற்குட்பட்ட சௌந்தரநாயகி அம்பாள், சமேத சோமேஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி திருவிழா நடந்து வருகிறது.

9ம் திருநாளான நேற்று காலையில் அருள்மிகு சௌந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சோமேஸ்வரர் சுவாமிக்கு விஷேச அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சோமேஸவரர், சௌந்தரநாயகி அம்பாள் 2 தேர்களில் உலா வந்தனர். இதில் சௌந்தரநாயகி அம்மன் தேரை, பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

The post சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி தேர் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: