தனியார் பள்ளிகள் திறப்பு; பெற்றோர்கள் அதிருப்தி

 

ஊட்டி, ஜூன் 2: தமிழக அரசு வரும் 7ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்த போதும், ஊட்டியில் சில தனியார் பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டதால் பெற்றோர்கள் அதிருப்திக்கு உள்ளாகினர். தமிழகத்தில் வழக்கம்போல, பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் கோடை வெயில் மிக அதிகமாக உள்ளதால், பள்ளிகளை தாமதமாக திறக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி வரும் 7ம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என அறிவித்தார்.

The post தனியார் பள்ளிகள் திறப்பு; பெற்றோர்கள் அதிருப்தி appeared first on Dinakaran.

Related Stories: