மல்யுத்த வீராங்கனைகள் கைது செங்கோல் முதல் நாளேவளைந்து விட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: பாஜ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும்-தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசு தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவது தான் அறமா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மல்யுத்த வீராங்கனைகள் கைது செங்கோல் முதல் நாளேவளைந்து விட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: