இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற சப்-இன்ஸ்ெபக்டர் வாகனத்தை நிறுத்தி விட்டு போதையில் இருந்த நபரை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது போதையில் இருந்த நபர் தன்னை விட்டு விடும்படி அவரது காலில் விழுந்து ெகஞ்சியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கு பேருந்துக்காக நின்று கொண்டு இருந்த சக பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
The post பேருந்து நிறுத்தத்தில் பயணியை தாக்கிய போதை ஆசாமி: சப்-இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கெஞ்சிய வீடியோ appeared first on Dinakaran.