திருமயம் அருகே கார்-பைக் பயங்கர மோதல்

 

திருமயம்.மே 23: திருமயம் அருகே காரும், பைக்கும் மோதிக்கொண்ட விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லெனாவிலக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் சொக்கலிங்கம் புதூர் கிராமத்தை சேர்ந்த மனோஜ் குமார்(17), முத்தூர் ஆதிசேஷன் (17), பட்டமங்கலம் கிருஷ்ணன் (18) ஆகியோர் படித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரி முடிந்த பிறகு மூன்று பேரும் ஒரே பைக்கில் திருச்சி- காரைக்குடி பைபாஸ் சாலையில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருமயம் வேங்கை கண்மாய் பகுதி பைபாஸ் சாலையில் பைக் சென்றபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த மாணவர்கள் மூவரும் பலத்த காயம் அடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக ஆம்புலன்சில் திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பலத்த காயமடைந்த மனோஜ் குமார், ஆதிசேஷன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமயம் அருகே கார்-பைக் பயங்கர மோதல் appeared first on Dinakaran.

Related Stories: