பிரபல நடிகர் ஆதித்யாசிங் ராஜ்புத் திடீர் மரணம்

மும்பை: நடிகரும், மாடலுமான ஆதித்யா சிங் ராஜ்புத்(33) நேற்று பிற்பகல் மும்பையில் உள்ள அவரது அந்தேரி வீட்டின் கழிவறையில் மயங்கி கிடந்தார். அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அவர் இருந்தார். அதனால் அவர் கழிவறையில் மயங்கி விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை கவனித்த பணியாளர் வீட்டு காவலாளிக்கு தகவல் தெரிவித்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். போதைப்பொருள் உட்கொண்டது காரணமா என்பதை அறிய பிரேதபரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post பிரபல நடிகர் ஆதித்யாசிங் ராஜ்புத் திடீர் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: