எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் ஆளுநரிடம் 22ம் தேதி நேரில் மனு

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வருகிற 22ம் தேதி பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்கின்றனர். அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக சார்பில் 22ம் தேதி காலை 10.25 மணிக்கு, சென்னை, சின்னமலை, தாலுகா அலுவலகம் சாலை, இயேசு கிறிஸ்து சபை அருகில் இருந்து, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு, ஆளுநர் மாளிகை சென்றடைந்து, முக்கிய அதிமுக நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளனர். இந்தப் பேரணியில், அதிமுகவின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் ஆளுநரிடம் 22ம் தேதி நேரில் மனு appeared first on Dinakaran.

Related Stories: