அவர்கள் தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களையும் ஆளுநர் ஆய்வு செய்தார். அப்போது, மாநில ஆவணக் காப்பகங்கள், தேசிய ஆவணக் காப்பகங்கள், இந்த விஷயத்தில் மேலதிக ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு கூடுதல் தகவல்களை சேகரிக்க வேண்டும். மேலும் சுதந்திர போராட்டத்தில் அவர்களது பங்களிப்பு பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக் கொண்டார். அந்த தியாகிகளின் வரலாறும் வாழ்வும் உரிய முறையில் இந்திய கண்ணோட்டத்தில் ஆராயப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆளுநர் கூறினார். இந்த கலந்துரையாடலில், அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் வேல்ராஜ், சென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தர் கவுரி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக பதிவாளர் நாகசுப்பிரமணி உள்பட 16 பல்கலைக் கழக துணை வேந்தர்கள் பங்கேற்றனர்.
The post 90 சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றி ஆராய்ச்சி ஆய்வறிஞர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல் appeared first on Dinakaran.