மதுபான கொள்கை முறைகேடு வழக்கு செய்தி சேனலின் மூத்த நிர்வாகி கைது: சிபிஐ அதிரடி

புதுடெல்லி: டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை கடந்த 2021ம் ஆண்டு செயல்படுத்தியது. இதில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த முறைகேட்டில் கிடைத்த ஹவாலா பணத்தை கடந்த ஆண்டு நடந்த கோவா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்கு ஆம் ஆத்மி பயன்படுத்தியது என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

அதில் ரூ.17 கோடி இந்தியா அஹெட் என்ற தனியார் செய்தி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியா அஹெட்டின் மூத்த நிர்வாகி அரவிந்த் குமார் சிங்கை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது.

The post மதுபான கொள்கை முறைகேடு வழக்கு செய்தி சேனலின் மூத்த நிர்வாகி கைது: சிபிஐ அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: