அப்போது, கள்ளச்சத்தையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சேப்பாக்கம் மைதானம் அருகே அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில் நிலையம் பகுதிகளில் கண்காணித்தனர்.
அப்போது, சட்டவிரோதமாக ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்ததாக பட்டரவாக்கம் பகுதியை சேர்ந்த மோகன்(20), யானைகவுனி பகுதியை சேர்நத் தமிழ்மணி(26), தி.நகரை சேர்ந்த பிரதீப்ராஜ்(19), புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(19), சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த முனிவேல்(21), பெரம்பலூர் பகுதியை சேர்ந்த கவியரசன்(21), ஆந்திரா மாநிலம் தடா பகுதியை சேர்ந்த திருநாத் ரெட்டி(20) ஆகிய 8 பேர் மீது தனித்தனியாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 ஐபிஎல் டிக்கெட்கள், ரூ.18,800 பணம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post ஐபிஎல் டிக்கெட்டுக்களை கள்ளச்சந்தையில் விற்ற 8 பேர் கைது: 14 டிக்கெட்டுகள், ரூ.18,800 பணம் பறிமுதல் appeared first on Dinakaran.