இம்மாதத்துக்குள் இட ஒதுக்கீடு அளிக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையை ராமதாஸ் எடுப்பார். மதுவினால் சமூக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மதுவிடமிருந்து அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும்’ என்றார். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, ‘தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு கட்சி பணம் கொடுக்காது. நீங்களும் செலவு செய்ய வேண்டாம். மக்களை நம்புங்கள். 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து என் உயிரையும் விட தயாராக உள்ளேன். தமிழ்நாட்டில் நாம் தமிழை வளர்க்க முன்வாரவிட்டால் யார் வளர்ப்பார்கள். தமிழை வளர்க்க ஆர்வம் காட்டாவிட்டால் நீங்கள் இங்கிலாந்தில் இருந்து வந்த வெள்ளைக்காரன் என்று சொல்லிவிடுவான்’ என்றார்.
The post 10.5% இட ஒதுக்கீடு உயிரை விட தயார்: ராமதாஸ் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.