பொள்ளாச்சியில் பயங்கரம்: கல்லூரி மாணவி குத்திக்கொலை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் வாலிபரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய் (27). இவர் பொள்ளாச்சி டி.கோட்டம்பட்டியில் உள்ள கவுரி நகரில் மனைவியுடன் வசித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான சுஜய் மனைவி, பிரசவத்திற்காக கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதற்கிடையே சுஜயின் வீட்டிற்கு கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி சுப்புலட்சுமி (20) என்பவர் அடிக்கடி வந்துசென்றுள்ளார்.

நேற்று மாலை சுப்புலட்சுமி கொடூரமாக கத்தியால் குத்துபட்ட நிலையில் சுஜய் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் இறந்து கிடந்தார். தகவலின்படி, மகாலிங்கபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுப்புலட்சுமி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடையர்பாளையத்தில் சுஜய் வசிக்கும்போது, சுப்புலட்சுமிக்கு சுஜய்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மனைவிக்கு தெரியாமல், சுப்புலட்சுமியுடன் தகாத தொடர்பு வைத்து இருந்திருக்கலாம் என்றும் நேற்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சுப்புலட்சுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்தநிலையில் தலைமறைவாக உள்ள சுஜயை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தனிப்படை மனைவியின் சொந்த ஊரான கேரள மாநிலம் பாலக்காட்டுக்கும், மற்றொரு தனிப்படை சுஜய் சொந்த ஊரான கோவை இடையர்பாளையத்துக்கும் விரைந்துள்ளனர். மற்றொரு தனிப்படை பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post பொள்ளாச்சியில் பயங்கரம்: கல்லூரி மாணவி குத்திக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: