கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி உயிருடன் மீட்பு

 

அந்தியூர், மே. 3: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மலைக் கருப்புசாமி கோயில் வனப்பகுதியோர விவசாயி சுந்தர். இவரது விவசாய நிலத்தில் உள்ள தோட்டத்து கிணற்றில் நேற்று காலை காட்டுப்பன்றி ஒன்று விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. இது குறித்து அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் வனத்துறையினர் மற்றும் அந்தியூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்து கிடந்த காட்டுப்பன்றியைக் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். பின்பு கொம்பு தூக்கி அம்மன் கோவில் பீட் மலைக் கருப்புசாமி கோவில் வனப்பகுதியில் மீட்கப்பட்ட காட்டுப்பன்றி பாதுகாப்பாக வனத்துறையினரால் விடப்பட்டது.

The post கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: