அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம்: முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் காமதேனு ராஜேந்திரன் தலைமையில் மே தின பொதுக் கூட்டம் திருமழிசையில் நடைபெற்றது. நகர, ஒன்றிய செயலாளர்கள் திருமழிசை ரமேஷ், ரவிச்சந்திரன், கவுதமன், புட்லூர் சந்திரசேகர், பூங்கோவன், மகேந்திரன், பேரழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத் தலைவர் பிரகாஷ், நாகராஜ், சங்கர், நாக அர்ஜூன், எழிலரசன், பிரதீப், பி.தீபக், ஜெகதீஷ், ஆறுமுகம், சதீஷ், வெங்கடேசன், வேலு ஆகியோர் வரவேற்றனர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் 500 பெண்களுக்கு சேலைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் டாக்டர் மூவேந்தன், முன்னாள் எம்எல்ஏ இரா.மணிமாறன், மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், ஜாவித் அகமத், விஜயலட்சுமி ஜெயபால், திருநாவுக்கரசு, வைதியநாதன், பூவை கோபிநாத், சல்மான் ஜாவித், நேமம் ராகேஷ், கிஷோர், பத்மநாபன், ரகு, செவ்வை நிரஞ்சன் சம்பத்குமார் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் பேரூராட்சி கவுன்சிலர் வேணு
கோபால் நன்றி கூறினார்.

The post அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம்: முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: