பாலியல் பலாத்காரம் செய்து மாணவி கொலை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: காங். ஆதிவாசி பிரிவு மாநிலத்தலைவர் வலியுறுத்தல்

 

மஞ்சூர், ஏப்.27: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆதிவாசி பிரிவு மாநில தலைவர் பிரியா நாஷ்மிகர் தமிழ்நாடு முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிறுப்பதாவது: சமீபத்தில் ஊட்டி பகுதியில் 9ம் வகுப்பு படித்து வந்த பழங்குடியின பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணியத்தை போற்றி பாதுகாக்க வேண்டிய சமுதாயத்தில் இன்றைக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்வது வேதனைக்குரியது.

9ம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவி சீரழிக்கப்பட்டு இறந்திருப்பது நீலகிரியின் வரலாற்றில் கருப்பு நாளாகும். இந்த கொடிய சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் எந்த வகையிலும் தப்பிக்க முடியாதபடியும் இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post பாலியல் பலாத்காரம் செய்து மாணவி கொலை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: காங். ஆதிவாசி பிரிவு மாநிலத்தலைவர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: