வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறில் மலேரியா விழிப்புணர்வு பேரணி

 

வேதாரண்யம்,ஏப்.26: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு வட்டாராத்தில் தலைஞாயிறு நீர்முளை நாலுவேதபதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மலேரியா தினம் கொண்டாடப்பட்டது. மேலும் தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் மலேரியா ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்று கொண்டனர். அதனை தொடர்ந்து உலக மலேரியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணிக்கு தலைஞாயிறு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் தலைமை தாங்கினார். தலைஞாயிறு மருத்துவ அலுவலர் கீர்த்தனா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தலைஞாயிறு சுகாதார ஆய்வாளர் இளையராஜா, வீரன், விக்னேஷ் செய்திருந்தனர். பேரணியில் மருத்துவ அலுவலர்கள் அனைத்து பணியாளர்கள் களப்பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறில் மலேரியா விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: