லலித் மோடிக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

புதுடெல்லி: இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) போட்டியின் தலைவராக இருந்தவர் லலித் மோடி. இந்த போட்டிகளை நடத்துவதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். கடந்த மாதம் இந்திய நீதித்துறையை விமர்சித்து அவர் சில கருத்துகளை தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு லலித் மோடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது பரிசீலித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா,சி.டி. ரவிக்குமார் ஆகியோர் கூறுகையில்,‘‘ நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்கிறோம். எதிர்காலத்தில் இது போல் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்தனர். இந்நிலையில், லலித் மோடிக்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post லலித் மோடிக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: