தீ விபத்தில் சிக்கியவர் பலி

திருப்பூர், ஏப்.19: உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் தேவேந்திர குமார் (23). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த கோம்பக்காடு பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.கடந்த 9-ம் தேதி தேவேந்திர குமார் தங்கி இருந்த அறையில் சமையல் செய்தபோது எதிர்பாராத விதமாக காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தேவேந்திர குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

The post தீ விபத்தில் சிக்கியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: