கல்பாக்கம் அருகே பைக் மீது கார் மோதி கண்டக்டர் பலி

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (48). மாநகர போக்குவரத்து கழக நடத்துனர். இவர், நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்றுவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சேரி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் பயங்கரமாக மோதியது.

இதில், செல்லமுத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிந்து காரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post கல்பாக்கம் அருகே பைக் மீது கார் மோதி கண்டக்டர் பலி appeared first on Dinakaran.

Related Stories: