பெரும்பாண்டி ஊராட்சியில் மகளிர் சுயஉதவி குழு விற்பனை அங்காடி துவக்கம்

கும்பகோணம், ஏப்.7: கும்பகோணம் பெரும்பாண்டி ஊராட்சியில் இயங்கி வரும் ரோஜா மகளிர் சுய உதவிக்குழு மூலமாக நேற்று சுவாமிமலை கோவில் அருகில் ரோஜா கைவினை பொருட்கள் சுய உதவிக்குழு விற்பனை சிறப்பு அங்காடியை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் தலைமையில், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான பம்பப்படையூர் முத்துசெல்வம் முன்னிலையில், கும்பகோணம் தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் வண்ணை.அரங்கநாதன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி தலைவி ஜெயந்தி, வார்டு கவுன்சிலர் பிரியா கோபால், ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியினை பெரும்பாண்டி ஊராட்சி ரோஜா சுய உதவிக்குழு நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

The post பெரும்பாண்டி ஊராட்சியில் மகளிர் சுயஉதவி குழு விற்பனை அங்காடி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: