மதுரை, ஏப். 6: மதுரை அருகே உள்ள எஸ்.கொடிக்குளம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார்(50). இவர் மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் துர்கா(23) என்பவரை அணுகி, அவருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய துர்கா, பல்ேவறு தவணைகளாக ரூ.11 லட்சம் வரை அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால், கூறியதுபோல் அரசு வேலை வாங்கித்தரவில்லை. இதனையடுத்து துர்கா, தான் கொடுத்த பணத்தை திரும்பத்தருமாறு கேட்டுள்ளார். அப்போது, முத்துக்குமார் ரூ.3.50 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளார். ஆனால், மீதமுள்ள ரூ.7.50 லட்சத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளார்.. இதுகுறித்து துர்கா தரப்பில் கே.புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்தப்புகாரின் பேரில் முத்துக்குமார், அவரது மனைவி பிரபா, மகன் ஹரி மற்றும் மருமகன் சுரேந்தர் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர். தொடர் விசாரணை நடந்துவருகிறது.
The post அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.