பல்லடம், மார்ச் 27: பல்லடம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கோகுல். தனியார் நிறுவன ஊழியர். கடந்த 18ந்தேதி இவருடைய வீட்டின் முன்பு நிறுத்திய பைக் திருட்டுப்போனது.
அதே வீதியில் உள்ள திவாகர் என்பவரது மோட்டார் பைக்கும் திருடப்பட்டது. இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அருள்புரம் பஸ் நிறுத்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.