பந்தலூர், மார்ச் 27: பந்தலூர் அருகே ஏலமன்னா பன்னிக்கல் பழங்குடியினர் கிராமத்தில் சென்னை பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை மாணவர்கள் முகாம் நடந்தது. உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஏலமன்னா பன்னிக்கல் பழங்குடியினர் கிராமத்தில் சென்னை பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை மாணவர்கள் மற்றும் ஏலமன்னா சிடிஆர்டி அறக்கட்டளை ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். பழங்குடியினர் மற்றும் கிராமமக்களின் வாழ்க்கை முறையை தெரிந்துகொள்வதற்கு மாணவர்கள் கடந்த நான்கு நாட்களாக 5 குழுக்களாக பிரிந்து மக்களின் சமூக பொருளாதாரம் வாழ்க்கை முறை மற்றும் கலாசாரப் பின்னணிகள் குறித்தும் விவரங்கள் திரட்டினர்.