வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மார்லிமந்து அணையில் மெல்ல சரியும் நீர்மட்டம்

ஊட்டி: ஊட்டி நகராட்சியின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான மார்லிமந்து அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.  ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணை விளங்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலை, கீழ்கோடப்பமந்து, மேல் கோடப்பமந்து உள்ளிட்ட அணைகள் விளங்கி வருகின்றன.

இந்த அணைகளில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சியின் 3,4வது வார்டுகளை உள்ளடக்கிய வண்டிச்சோலை, சர்ச்ஹில், மார்லிமந்து மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மார்லிமந்து அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த இரு மாதங்களுக்கு ேமலாக பெய்தது. நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.

இதேபோல், ஊட்டி நகராட்சியின் குடிநீர் ஆதாரங்களான பார்சன்ஸ்ேவலி அணை, டைகர்ஹில் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. மார்லிமந்து அணையிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 23 அடி வரை நீர் இருப்பு இருந்தது. தற்போது கடந்த 3 மாதங்களாக மழையின்றி பகல் நேரங்களில் வெயில் நிலவி வரும் நிலையில், குடிநீருக்காக நாள்ேதாறும் அணையில் இருந்து நீர் எடுக்கப்பட்டு வருவதால், மார்லிமந்து அணையில் இருந்து நீர்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.  தற்போது, அணையில் 17 அடி வரை நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தாலும், கோடை சீசனின் போது குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்பில்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: