ஈரோடு, மார்ச் 20: ஈரோடு வீரப்பன்சத்திரம், மல்லிநகரை சேர்ந்தவர் காசிநாதன் (63). இவரது மனைவி பாப்பாத்தி. காசிநாதனுக்கு நரம்பு தளர்வு காரணமாக வலிப்பு நோய் இருந்துள்ளது. இந்நிலையில் காசிநாதனுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி தனது வீட்டின் அருகே காசிநாதன் அமர்ந்து மது அருந்தி உள்ளார். பின்னர் அவர் எழுந்த போது போதையில் அருகில் இருந்த ஓடையில் தவறி விழுந்தார்.