குடிபோதையில் ஓடையில் தவறி விழுந்த முதியவர் பலி

ஈரோடு, மார்ச் 20:  ஈரோடு வீரப்பன்சத்திரம், மல்லிநகரை சேர்ந்தவர் காசிநாதன் (63). இவரது மனைவி பாப்பாத்தி. காசிநாதனுக்கு நரம்பு தளர்வு காரணமாக வலிப்பு நோய் இருந்துள்ளது. இந்நிலையில் காசிநாதனுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி தனது வீட்டின் அருகே காசிநாதன் அமர்ந்து மது அருந்தி உள்ளார். பின்னர் அவர் எழுந்த போது போதையில் அருகில் இருந்த ஓடையில் தவறி விழுந்தார்.  

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் காசிநாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: