பள்ளி ஆண்டுவிழாவில் மாணவர்கள் நடனம் ஆடி அசத்தல்

பந்தலூர்,மார்ச் 19: பந்தலூர் அருகே அம்மங்காவு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் ஆண்டு விவழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் அசத்தினர். பந்தலூர் அருகே அம்மங்காவு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் 57ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் கீதா சரஸ்வதி ஆண்டறிக்கை வாசித்தார்.

பள்ளி ஆசிரியர் பாக்கியராஜ், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலகிருஷ்ணன், நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர் ராகவன், நேரு இளையோர் மன்ற தனலைவர் விஜயகுமார் ,விஜயசுந்தரம் ,கோபு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவ மாணவர்களின் பல்வேறு  கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது ,நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் விஜயலட்சுமி, ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் யசோதரவாசன், பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: