ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்: ஆண் குழந்தை பிறந்தது

திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராக்கி தாஸ் (35), பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சோபாய் மெகந்த் (33) இவர் நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். திருப்பூரில் இருந்து இருந்துஆம்புலன்ஸ் டிரைவர் தயாளன் மற்றும் மருத்துவ உதவியாளர் ஜீவா பிரசாந்த் ஆகியோர் ஆம்புலன்சில் சென்று சோபாய் மொகந்தை திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் பாரப்பாளையம் பகுதியில் வந்த போது சோபாய் மெகந்த்க்கு பிரசவ வலி அதிகமானது. இதனைதொடர்ந்து சோபாய் மெகந்த்க்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தையும், தாயும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: