திருப்பூர்: திருப்பூரில் மது அருந்தியதை தட்டிகேட்ட 3 பேருக்கு கத்திகுத்து விழுந்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியை அடுத்துள்ள ஜனசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (53). இவர் அப்பகுதியில் கோவில் பூசாரியாக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டருகில் 4 பேர் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இதனை பார்த்த பழனிச்சாமி இங்கு அமர்ந்து மது அருந்தக்கூடாது என கூறியுள்ளார். இது குறித்த தகராறில் பழனிச்சாமிக்கும், 4 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தட்டி கேட்பதற்காக பழனிச்சாமியின் மகன் சுரேந்திரன் (20) உறவினர் செல்வகுமார் (25) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.