தேனி, மார்ச். 14: பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டியில் தரமற்றதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஊராட்சி மன்ற உறுப்பினர் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டதாக பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியை சேர்ந்த 3 வது வார்டு மன்ற உறுப்பினர் பேச்சியம்மாள் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனுவினை கலெக்டர் ஷஜீவனாவிடம் அளித்தார். இம்மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.