2 பேர் படுகாயம் அமைச்சர் ரகுபதி பணி நியமன ஆணை வழங்கினார் கேசராபட்டியில் சிறப்பு பொங்கல் விழா

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் சிறப்பு பொங்கல் விழா நடைபெற்றது. கேசராபட்டி கூழையன், பொன்னழகிஅம்மன், சுந்தாயி அம்மன் கோயில் சிறப்பு மாட்டுப்பொங்கல் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அங்குள்ள கோயில் வீட்டில் இருந்து சுவாமியாடி பொங்கல் கூடை சுமந்து சென்று கோயில் முன் திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இதனைத்தொடர்ந்து மாடுகளுக்கு துண்டு வழங்கி தீர்த்தம், சுவாமியாடி தெளித்தனர். இதனைத் தொடர்ந்து மாடுகள் அவித்துச் சென்றனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: