வருசநாடு: மயிலாடும்பாறை அருகே உள்ள பொன்னன்படுகை ஊராட்சியில் கொங்கரவு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் சுடுகாட்டு பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் சுடுகாட்டிற்கு செல்லும் சாலையின் குறுக்கே சிறு பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.