ஊட்டி: ஊட்டியில் வனப்பகுதிகளுக்குள் உலா வரும் குதிரைகளால் வன விலங்குகளுக்கு நோய் பரவும் அபாயம் நீடிக்கிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களை பார்த்து ரசிப்பது மட்டுமில்லாமல் குதிரை சவாரி, படகு சவாரி, நடைபயணம் போன்றவை மேற்கொள்கின்றனர். குறிப்பாக குதிரை சவாரி மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஊட்டியில் ஏராளமான குதிரைகள் காண முடியும். இந்த குதிரைகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சவாரிக்கு அழைத்து செல்லபவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் வைத்தள்ள குதிரைகளை முறையாக பராமரிப்பதில்லை.
