ஆர்.எஸ்.மங்கலம் மார்ச் 9: சனவேலி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாத சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி கிராமத்தை சுற்றி கவ்வூர், காவனக்கோட்டை, கண்ணுகுடி, ஏ.ஆர்.மங்கலம், கொண்ணக்குடி, பகவதி மங்கலம், குலமாணிக்கம், ஓடைக்கால் உள்ளிட்ட பல கிராம பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்கு பொருட்கள் வாங்கவும், ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல சனவேலிக்கு வரவேண்டும். வாரந்தோறும் வியாழக் கிழமையன்று வாரச்சந்தையும் நடைபெறுவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் வந்து செல்கின்றனர்.