ஊட்டி: எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நீலகிரி மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய அரசு கடந்த ஓராண்டில், 8 முறை எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தியுள்ளது. தற்போது ஒரு சிலிண்டருக்கு ரூ.1180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கமர்சியல் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் உள்ள ஏடிசி பகுதியில் நீலகிரி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நீலகிரி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்வரி பாபு தலைமை வகித்தார்.
