செங்கம், மார்ச் 2: செங்கம் டவுனில் 5 பேரை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கம் டவுன் மேலப்பாளையத்தில் நேற்று காலை தெருவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த வெறிநாய் ஒன்று அந்த வழியாக சென்ற நபர்களை விரட்டி விரட்டி குடித்து குதறியது. இதில், 5 பேர் ரத்த காயங்களுடன் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.