சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது பெரணமல்லூர் அருகே சிறப்பு வகுப்புக்கு சென்ற

பெரணமல்லூர், ஜூன் 11: பெரணமல்லூர் அருகே சிறப்பு வகுப்பு சென்ற சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத இந்த சிறுமி, அருகில் உள்ள அரசு பள்ளியில் நடந்து வரும் சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி சிறப்பு வகுப்பிற்கு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு என பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எனவே, காணாமல் போன மகளை மீட்டு தரக்கோரி அவரது பெற்றோர் பெரணமல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், படவேடு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன்(28) என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், நேற்று முன்தினம் படவேடு பகுதிக்கு சென்று வாலிபர் வீட்டில் இருந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், சிறுமியை கடத்திச் சென்றதற்காக சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர், அவரை திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது பெரணமல்லூர் அருகே சிறப்பு வகுப்புக்கு சென்ற appeared first on Dinakaran.

Related Stories: