திருப்பூர்,பிப்.27: திருப்பூர் ராதாநகர் பகுதியில் டாஸ்மாக் கடையில் தேவ கோட்டையை சேர்ந்த பாண்டி (43) என்பவர் விற்பனையாளராக உள்ளார். கடந்த வாரம் டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில் வாங்க வந்தவருக்கும் பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை டாஸ்மாக் கடைக்கு வந்த கும்பல், ஏற்கனவே நடந்த சம்பவத்தை கூறி தகராறில் ஈடுபட்டது. பின்னர் பாண்டிய கட்டையால் தாக்கினர். இதில் அவரது தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது. அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.