பழநி: பழநி கோயிலுக்கு கேரள பக்தர்கள் வருகை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூச திருவிழாவின் காரணமாக கடந்த 2 மாதங்களாக பழநி கோயிலுக்கு தமிழக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. பழநி கோயிலில் கும்பாபிஷேகம் முடிவடைந்து தற்போது மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது பழநி கோயிலுக்கு கேரள மாநில பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.