கோவை, செப்.30: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த நவீன் ப்ளைவுட்ஸ் ஹார்டுவேர்ஸ் கடை மற்றும் மேட்டுப்பாளையம் தபால் நிலையத்தின் அருகே உள்ள ஹோம் இண்டிரியர் கடைக்குள் கடந்த 22ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் பொது சொத்துக்களை எரித்தல் மற்றும் சேதப்படுத்துதல் ஆகிய இரண்டு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.