சாயல்குடி, அக். 1: சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் பழமையான அரக்காசு அம்மா தர்ஹாவில் இந்து&முஸ்லீம் மக்கள் இணைந்து சந்தன காப்பு கந்தூரி திருவிழா கொண்டாடினர். சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் சுமார் 310 ஆண்டு பழமையான அரக்காசு அம்மா தர்ஹா உள்ளது. இங்கு இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் இணைந்து ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறையில் சந்தனகாப்பு கந்தூரி திருவிழா கொண்டாடுவது வழக்கம். கடந்த வாரம் தர்ஹாவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. நேற்று காலையில் நடந்த கந்தூரியில் உலக நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், சிறப்பு மவுலீது ஓதப்பட்டு,