காரைக்கால், செப்.30: காரைக்காலில் தொடர் மின் தடையால் பிஎஸ்என்எல் சேவை முற்றிலும் முடங்கியது. காரைக்காலில் மின்துறை தனியார் மையம் ஆவதை எதிர்த்தும் மின்துறை தனியாருக்கு டெண்டர் விடப்பட்டதை திரும்ப பெறக் கோரியும் மின்துறை ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக காலவரையின்றி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காரைக்காலில் கிராம பகுதிகள் மற்றும் காரைக்கால் நகரப்பகுதி ஒரு சில இடங்களில் கடந்த 36 மணி நேரமாக தொடர் மின்வெட்டு நிலை வருகிறது. இதனிடையே காரைக்கால் மதகடி யில் உள்ள மத்திய சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் கடந்த 36 மணி நேரமாக மின்தடை ஏற்பட்டுள்ளதால் காரைக்காலில் மாவட்டம் முழுவதும் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.