குளத்தூர்,செப்.29: தருவைகுளம் தூயமிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழாவில் இன்று தேர் பவனி நடக்கிறது. குளத்தூரையடுத்த தருவைகுளம் தூயமிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா கடந்த 20ம் தேதி மாலை தருவைகுளம் பங்குதந்தை லாசர், மரியஅரசு, வினித், வின்சென்ட் ஆகியோர் தலைமையில் திருப்பவனி, திருப்பலி, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் தொடர்ந்து பத்து நாட்கள் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர்வாதம், திருமுழுக்கு, நற்கருணைபவனி, பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி, ஜெபமாலை நடந்தது. நேற்று முன்தினம் மாலை புனிதமிக்கேல் அதிதூதரின் சப்பரப்பவனி முக்கிய வீதிகளில் நடந்தது. முன்னதாக தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் மறையுரை வழங்கினார். நேற்று காலை சிறுமலர் குருமட ஆன்மீக குரு சகாயஜோசப் தலைமையில் பாளை மறைமாவட்ட பொருளாளர் அந்தோணிசாமி மறையுரை வழங்கினார்.