திருவாடானை,செப்.29: திருவாடானை ஓரியூர் சாலையில் மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில் கடந்த 19ம் தேதி காப்பு கட்டுகளுடன் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.