திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டம், விஷ்ணுவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாநில நெடுஞ்சாலை அருகில் விஷ்ணுவாக்கம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு நீண்ட காலமாக நிழற்குடை அமைக்கப்படவில்லை. இந்நிலையில், விஷ்ணு வாக்கத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த சூழலில் இரண்டு முறை நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை அடிப்படையில் நிழற்குடை அமைக்கலாம் என அதிகாரிகள் கடந்த மே மாதம் 18ம் தேதி எழுத்து பூர்வமாக வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். கடந்த மூன்று மாதங்களாக காலம் கடத்திய நிலையில் நேற்று திடீரென நிழற்குடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது.