காங்கிரஸ் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

 

புழல்: கோடை காலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தண்ணீர் பந்தல் திறந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்திட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் புழல் பகுதி காங்கிரஸ் சார்பில் நீர், மோர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா புழல் அம்பேத்கர் சிலை பேருந்து நிறுத்தும் அருகில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புழல் பகுதி பொறுப்பாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் தலைமை பொதுக்குழு உறுப்பினர் புழல் குபேந்திரன், மாநில காங்கிரஸ் தகவல் அறியும் சட்ட ஒருங்கிணைப்பாளர் கிரி, கதிர்வேடு அச்சுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் ஆர்.எம்.தாஸ், புழல் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குளிர்பானங்கள், பழங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, வேல்முருகன், நித்தியானந்தம், பலராமன், பிரதீப், நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காங்கிரஸ் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: