கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை: இன்று முதல் முன்பதிவு துவக்கம்

 

திருவள்ளூர், ஏப். 29: திருவள்ளூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக சென்னை மாவட்டத்தில் செயல்படும் சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024 – 2025ம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி காலம் ஒரு வருடம் ஆகும். இரண்டு பருவ முறைகளில் இப்பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் பயிற்சி கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இந்த பயிற்சியில் சேர்வது குறித்த நிபந்தனைகள் மற்றும் விபரங்களை www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் காணலாம்.

கூடுதல் விவரங்களுக்கு பயிற்சி நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம், (சென்னை மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக வளாகம்) 215, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை – 1 என்ற விலாசத்தில் பயிற்சி நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு எண்: 044 25360041 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

The post கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை: இன்று முதல் முன்பதிவு துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: