வலங்கைமான்,ஆக.12: வலங்கைமான் அடுத்த அரவூரில் புதிதாக திறக்கப்பட்ட மளிகை கடை நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் எரிந்து சேதமானது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த அரவூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (41). இவர் அப்பகுதியில் கூரை கட்டிடத்தில் கோழி கடை வைத்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கோழிக்கடையினை அப்புறப்படுத்திவிட்டு அதனை மளிகை கடையாக மாற்றியுள்ளார். மின்வசதி இல்லாத அக்கூறை கட்டிடம் நல்ளிரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் கூரை மற்றும் கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் எரிந்து சேதமானது. இச்சம்பவம் தொடர்பாக பாலசுப்பிரமணியன் வலங்கைமான் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்கள் யாரேனும் கடைக்கு தீ வைத்தனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.