ஏரியில் தவறி விழுந்து முதியவர் பலி

ஜெயங்கொண்டம், ஆக.11: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (70). சம்பவத்தன்று நயினார் ஏரியில் குளிக்க செல்லும்போது தவறி கீழே விழுந்தார். மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். ஜெயங்கொண்டம் சப்இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Related Stories: