வேதாரண்யம், ஆக.10: வேதாரண்யம் அருகே மழை மாரியம்மன் கோயில் ஆடி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் அமைந்துள்ள மழை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கடந்த 10 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நேற்று மழை மாரியம்மன் குதிரை வாகனத்தில் வண்ண மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோயிலை சுற்றி வலம் வந்தனர்.