நாமக்கல், ஆக. 8: நாமக்கல்லில் கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவியர் 37 ஆண்டுக்கு பின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் நகராட்சி கோட்டை உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1985ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி 37 ஆண்டுக்கு பிறகு நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது.முன்னாள் மாணவ, மாணவியர் பல வருடங்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் பார்த்து மனம்விட்டு பேசி மகிழ்ந்தனர். படிக்கும்போது இருந்த பள்ளியின் தோற்றம் தற்போது மாறியிருந்தாலும், தாங்கள் படித்த வகுப்பில் அமர்ந்தும், விளையாடியும் மகிழ்ந்தனர்.